ரேஷன் கடைகளில் நவம்பர் வரை ஒருகிலோ கோதுமை இலவசம்!
Aug 17, 2020, 08:06 IST1597631798000
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலம் என்பதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.
ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 5 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமையையும் நவம்பர் வரை இலவசமாக தர பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.