ஜூன் 5ல் ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

 

ஜூன் 5ல் ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, வரும் மே 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மக்களின் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 5ல் ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

இந்நிலையில் ஜூன் மாத இலவச பொருட்களை வழங்க ஏதுவாக தமிழகத்தில் வாராந்திர முதல் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளான ஜூன் 5 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.