கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு!

 

கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி

திருச்சி அருகே சாலையில் கால்நடைகளை ஓட்டிச்சென்ற தொழிலாளி மீது கார் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த எக்குச்சி மேடு பகுதியை சேர்ந்தவர் நல்லி. கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது ஆடுகளை திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சாலைக்கு சென்ற ஆடுகளை விரட்டச் சென்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் நல்லியின் மீது மோதியது.

கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு!

இதில், பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.