இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில், பெயிண்டர் பலி!
கரூர்
கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்
கரூர் மாவட்டம், தென்னிலை அருகேயுள்ள வாழநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் (25). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கவுதம் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் தென்னிலைக்கு கொண்டிருந்தார்.
தென்னிலை அருகேயுள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் சென்றபோது, கவுதம் வாகனத்தின் மீது எதிரே வந்த மினிவேன் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கவுதமை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நாமக்கல்லை சேர்ந்த மினிவேன் ஓட்டுநர் சடையப்பன் (49) என்பவரை கைதுசெய்தனர்.