இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

 

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

ஈரோடு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு, நரிப்பள்ளம் பகுதியில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பன்னீர்செல்வம் வேலைக்காக ஈரோட்டிலிருந்து, சித்தோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

சத்தி மெயின் ரோடு வழியாக சென்றபோது பன்னீர்செல்வம் வாகனத்தின் மீது, எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பன்னீர்செல்வத்திற்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைம அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.