தனியார் நுற்பாலை வேன் – அரசுப் பேருந்து மோதல்; ஓட்டுநர் உள்பட 5 பேர் பலி!

 

தனியார் நுற்பாலை வேன் – அரசுப் பேருந்து மோதல்; ஓட்டுநர் உள்பட 5 பேர் பலி!

திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே தனியார் நூற்பாலை ஊழியர்கள் சென்ற வேன் மீது, அரசுப் பேருந்து மோதியதில் பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு, இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று தேனிக்கு சென்று கொண்டிருந்தது. வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி பிரிவு அருகே சென்றபோது திடீரென பேருந்தின் டயர் வெடித்தது.

தனியார் நுற்பாலை வேன் – அரசுப் பேருந்து மோதல்; ஓட்டுநர் உள்பட 5 பேர் பலி!

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, எதிரே உசிலம்பட்டியில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நூற்பாலை வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர், பெண் தொழிலாளர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.