சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதல்- பெண் உள்பட மூவர் பலி!

 

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதல்- பெண் உள்பட மூவர் பலி!

விருதுநகர்

அருப்புகோட்டை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவர்கள் மீது கார் மோதிய விபத்தில், சென்னையை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கோகுல். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் கொளத்தூரை சேர்ந்த உறவினர் கார்த்திக் உள்ளிட்டோருடன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். தொடர்ந்து, நேற்று மாலை அனைவரும் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். காரை கோகுல் ஓட்டிச்சென்றார்.

நேற்றிரவு 8 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அடுத்த பந்தல்குடி புறவழிச் சாலையில் உடையநாதபுரம் விலக்கு அருகே சென்றபோது, அங்கு சாலையை கடக்கமுயன்ற அதே பகுயை சேர்ந்த சிறுவர்கள் மீது கார் மோதியது. பின்னர், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதல்- பெண் உள்பட மூவர் பலி!

இந்த விபத்தில், பந்தல்குடி கங்கையநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் சந்தோஷ், கோகுலின் மகன் மாதேஷ் மற்றும் கார்த்திக்கின் மனைவி கனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழநதனர். மேலும், பந்தல்குடியை சேர்ந்த மதிவாணன்(16), கார்த்திக் தாயார் அமுதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார், மூவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.