குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

நெல்லை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்த கூத்தங்குழியை சேர்ந்தவர் மோஸ். இவரது மனைவி ரபீனா (26). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இதனால் சில சமயங்களில் ரபீனா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த ரபீனா மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் உடலில் தீப்பற்றியதால் அலறி துடித்த ரபீனாவை, மோஸ் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ரபீனா உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.