விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உட்பட 112 பேருக்கு கொரோனா உறுதி!

 

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உட்பட 112 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 94,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தலைமை செயலாளர், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர் படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உட்பட 112 பேருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிகை3,243 ஆக அதிகரித்துள்ளது.