மயில்களை வேட்டையாடிய சிறுவன் உள்பட இருவர் கைது!

 

மயில்களை வேட்டையாடிய சிறுவன் உள்பட இருவர் கைது!

திருவாரூர்

மன்னார்குடி அருகே சட்டவிரோதமாக மயில்களை வேட்டையாடிய 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தலையாமங்லம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் கையில் சாக்குமூட்டை மற்றும் நாட்டுத் துப்பாக்கி உடன் வந்த சிறுவன் உள்ளிட்ட இருவரை மடக்கிப்பிடித்தனர்.

மயில்களை வேட்டையாடிய சிறுவன் உள்பட இருவர் கைது!

தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது அதனுள் சட்டவிரோதமாக மயிலை வேட்டையாடி கொண்டுவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இவருரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருமாக்கோட்டை அடுத்த திருமேனி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த இளங்குமரன்(35) மற்றும் அவரது உறவினரான 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இருவரும் தலையாமங்கலம் அடுத்த சோழபாண்டி கடுக்காகாடு பகுதியில் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 இறந்த மயில்கள், நாட்டுத்துப்பாக்கி மற்றும் இருசக்கர வானத்தை பறிமுதல் செய்து, மன்னார்குடி வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.