தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
Jul 26, 2020, 08:17 IST1595731677000
கொரோனா காலக்கட்டத்திற்கு நடுவே தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 438 திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயர் ஸ்டீபன் தலைமையில் தூய பனிமய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
கொரோனா கட்டுப்பாட்டால் பக்தர்கள் யாரும் ஆலயத்தில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. பேராலயத்தில் பக்தர்கள் கூடுவதை தடுக்க சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.