கடன் தொல்லையால் தனியார் மருத்துமனை காவலாளி தற்கொலை!

 

கடன் தொல்லையால் தனியார் மருத்துமனை காவலாளி தற்கொலை!

திருச்சி

திருச்சி தென்னூரில் கடன் தொல்லை காரணமாக தனியார் மருத்துவமனை காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (33). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், 4 வயதில் மகள் உள்ளார்.

கடன் தொல்லையால் தனியார் மருத்துமனை காவலாளி தற்கொலை!

இந்த நிலையில், ஆரோக்கியராஜ் குடும்ப செலவிற்காக அதிகளவு பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் சுமை அதிகரித்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆரோக்கியராஜ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் ஆரோக்கியராஜ் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் தனியார் மருத்துவமனை காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.