பெற்றோர் கண்டித்ததால், அரசுப்பள்ளி மாணவி தற்கொலை!

 

பெற்றோர் கண்டித்ததால், அரசுப்பள்ளி மாணவி தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்தும் படி கண்டித்ததால், 6 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள கொடிக்கால் காலனியை சேர்ந்தவர் மகேஷ் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரிகா (35). இவர்களது மகள் தனலட்சுமி(11). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில், சிறுமியின் தாயார் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இதனால் படிப்பில் கவனம் செலுத்தபடி சிறுமி தனலட்சுமியிடம் கூறியுள்ளார்.

பெற்றோர் கண்டித்ததால், அரசுப்பள்ளி மாணவி தற்கொலை!

இதனால், பதற்றம் அடைந்த சிறுமி கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் தனலட்சுமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமி தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் ஈத்தாமொழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.