தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி!
Aug 4, 2020, 14:30 IST1596531636000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.