திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாகவும் தற்போது 24 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருப்பதாகவும் மாநகரட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம்,தேனி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 345 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15,087 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கும்மிடிபூண்டியில் 58 பேருக்கும், மீஞ்சூரில் 55 பேருக்கும் சோழவரத்தில் 24 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.