சென்னையில் ஒரேநாளில் 13 பேர் கொரோனாவுக்கு பலி!
Aug 16, 2020, 10:22 IST1597553526000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது . நேற்று ஒரேநாளில் 5,860 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை கடந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக கொரோனா எனும் அரக்கனை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து உழைத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி- 6 கே.-எம் சி-2, ஸ்டான்லி -2, தனியார் மருத்துமனையில் 3 பேர் என மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர்.