ஐபிஎல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகல்!

 

ஐபிஎல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகல்!

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஐபிஎல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகல்!

இதையடுத்து 2 முறை கொரோனா பரிசோதனைக்கு பின்னர் கடந்த 21 ஆம் தேதி தோனி தலைமையில் சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் என 51 நபர்கள் ஐக்கிய அமீரகம் சென்றனர். ஆனால் அங்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சென்னை அணியில் வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
https://twitter.com/ChennaiIPL/status/1299582504886775808

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் , சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார் என்றும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று பதிவிட்டுள்ளார். இதனால்சிஎஸ்கேரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.