சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் வீரர் உட்பட 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் வீரர் உட்பட 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவி பணியாளர்கள், வீரர் உட்பட13 பேருக்கு கொரோன நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

ஆண்டு தோறும் கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கிடக்கும் ஒரே விஷயம் ஐ.பி.எல் போட்டி தான். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளது. 3 ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டியில் பட்டம் வென்ற சென்னை அணி இந்த ஆண்டும் பட்டத்தை பெற வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் வீரர் உட்பட 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதற்காக, தோனி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி தொடங்கிய நிலையில் சென்னை சிங்கங்கள் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றனர். சென்னையிலிருந்து சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் என 51 நபர்கள் குழுவாக சென்றனர். அவர்கள் அனைவருக்கும் துபாயில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உதவி பணியாளர்கள் 12 பேருக்கும் வீரர் ஒருவருக்கும் கொரோனாநோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு வார காலம் சென்னை அணி தனிமைப்படுத்தப்படும், மேலும் சென்னை அணியின் பயிற்சியும் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.