முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து

 

முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து

கடலூர்

பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரில் தனியார் முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, முந்திரி தோடு மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்ட்டது. தொடர்ந்து தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து

இதனால் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். தகவல் அறிந்து பண்ருட்டி, கடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் இயந்திரங்கள், முந்திரி எண்ணெய் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தகவலின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து, காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.