தனியார் பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து – ஊழியர் பலி!

 

தனியார் பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து – ஊழியர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தனியார் பஞ்சு மில்லில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பாறைப்பட்டி பகுதியில் ஷாஜஹான் என்பருக்கு சொந்தமான பஞ்சு மில் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலையில் பஞ்சு குவித்து வைத்திருந்த பகுதியில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.

தனியார் பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து – ஊழியர் பலி!

சிறிது நேரத்தில் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதால், ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். அப்போது, மூச்சுதிணறல் ஏற்பட்டதில் பிரவீன்(27) என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும், மாரியப்பன் என்பவர் தீக்காயம் அடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.