“எஸ்.பி.பி. உடல்நிலை பற்றி கேட்டறிந்தேன்” அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!
50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் இசை உலகின் ஓர் சகாப்தம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் அவர் கொரோனா என்ற அரக்கன் பிடியில் சிக்கி போராடி வருகிறார். அவர் மீண்டும் மீண்டு வர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஒரே பிரார்த்தனையாக உள்ளது.
Spoke to legend Singer #SPBalasubrahmanyam son SPB Charan & MD of MGM Hospital. Enquired about his health condition. Assured support from Govt. Wishing him a speedy recovery #GetwellSoonSPBSir
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) August 14, 2020
இந்நிலையில் எஸ். பி. பி உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எஸ்.பி.பி. உடல்நிலை பற்றி அவரது மகன் சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அரசு தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். அவர் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.