என் நண்பன் பாலு, மீண்டு வருவான் காத்திருக்கிறேன்: இயக்குநர் பாரதிராஜா
கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தந்தையின் உடல் சீராக இருப்பதாகவும், அச்சப்படும் அளவிற்கு ஏதுமில்லை என்றும் எஸ்.பி.பியின் மகன் சரண் விளக்கமளித்திருந்தார்.
என் நண்பன்
பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/8gyemadGpg— Bharathiraja (@offBharathiraja) August 14, 2020
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான். காத்திருக்கிறேன். அன்புடன் பாரதிராஜா” எனக் குறிப்பிட்டுள்ளார்.