பாலு…. சீக்கிரம் வா…. உனக்காக காத்திருக்கின்றேன்: இளையராஜா உருக்கம்
கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நலமாக இருப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும் அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். இதனிடையே எஸ்.பி சுப்பிரமணியனித்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
RAJA of MUSIC❤️🎵
RAJA of FRIENDSHIP❤️🎵🙏🏻I got so emotional watching this!
Very Soon we r gona see #Ilayaraja sir & #SPB sir on STAGE together n Celebrate as sn as d PANDEMIC gets Over..
D way He said “Balu Seeggaram Vaa”..I got goosebumps n tears❤️#GetWellSoonSPB ❤️🙏🏻 pic.twitter.com/L18uAH8dJr
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) August 14, 2020
இந்நிலையில் இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உன்னுடைய நட்பும், என்னுடைய நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பு. சண்டை இல்லாமல் போனாலும் அது நட்பே. அதனை நியும் நன்றாக அறிவாய். நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நன்றாக பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என்று… என்னுடைய உள் உணர்வு சொல்லுகிறது. பாலு…. சீக்கிரம் வா…. உனக்காக காத்திருக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.