மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது!

 

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது!

ஈரோடு

ஈரோடு அருகே மதுபோதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் சங்கர் (58). கூலி தொழிலாளி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், தீனதயாளன் உள்பட 2 மகன்களும் உள்ளனர். தீனதயாளன் பிரபல சமையல் எண்ணை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, தீனதயாளன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது!

இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்றிரவு மதுபோதையில் வந்த தீனதயாளன், தந்தை சங்கருடன் வாக்கவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அவர், தந்தை சங்கரை கீழே தள்ளி, அவரது நெஞ்சுப்பகுதியில் கால்களால் உதைத்து உள்ளார்.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அரசலூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைதுசெய்தனர்.