குடிநீர் தொட்டிக்குள் குதித்து அக்கா, தம்பி தற்கொலை… உருக்கமான கடிதம் சிக்கியது…

 

குடிநீர் தொட்டிக்குள் குதித்து அக்கா, தம்பி தற்கொலை… உருக்கமான கடிதம் சிக்கியது…

கோவை

கோவை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரியுடன், மென் பொறியாளர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள கூ.கவுண்டம்பாளையம் பகுதியை அலமேலு(45). இவருக்கு பிரீதா (30) என்ற மகளும், அருண்குமார்(25) என்ற மகனும் உள்ளனர். அருண்குமார் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். பிரீதா மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

திருமண வயதிலான சகோதரி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தந்தை உயிரிழந்ததால் அருண்குமார் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி அருண்குமார், தனது அக்கா பிரீத்தாவுடன் வீட்டில் இருந்து மாயமாகினார்.

குடிநீர் தொட்டிக்குள் குதித்து அக்கா, தம்பி தற்கொலை… உருக்கமான கடிதம் சிக்கியது…

பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்காததால், அலமேலு பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் அருண்குமார் மற்றும் பிரீதா ஆகியோர் சடலமாக மிதந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறப்பதற்கு முன்பு அவர், எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.