கள்ளக்காதல் ஜோடி ஏரியில் விழுந்து தற்கொலை… உறவினர்கள் எதிர்ப்பால் விபரீத முடிவு…

 

கள்ளக்காதல் ஜோடி ஏரியில் விழுந்து தற்கொலை… உறவினர்கள் எதிர்ப்பால் விபரீத முடிவு…

சேலம்

சேலம் அருகே கள்ளக்காதல் ஜோடி ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்த கூடலூரை சேர்ந்தவர் சேகர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் ஆட்டையாம்பட்டி அடுத்த மறுளையம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார். இதேபோல், திருச்செங்கோடை சேர்ந்த கோபால் என்பவரது மனைவி கோமதி. குடும்ப தகராறில் கணவரை பிரிந்த கோமதி, ஆட்டையாம்பட்டி அடுத்த காளிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது, அங்கு பணிபுரிந்த சேகருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிய வரவே சேகரின் மனைவி சுமதி, அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

கள்ளக்காதல் ஜோடி ஏரியில் விழுந்து தற்கொலை… உறவினர்கள் எதிர்ப்பால் விபரீத முடிவு…

குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சேகர் கிடைக்காததால், இதுகுறித்து சுமதி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று ஆட்டையாம்பட்டியில் உள்ள ஏரியில் சேகர் மற்றும் கோமதி ஆகியோர் கைகளை கயிற்றால் பிணைத்தவாறு சடலமாக மிதந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சேகர் – கோமதி ஆகியோரது உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து வழக்கப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.