ஹார்மோன் நோயால் வேதனை… இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

 

ஹார்மோன் நோயால் வேதனை… இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

கோவை

சூலூர் அருகே உடல்நலக் குறைவால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி ராஜலட்சுமி (39). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், ராஜலட்சுமிக்கு ஹார்மோன் குறைபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஹார்மோன் நோயால் வேதனை… இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

நீண்ட நாட்களாகியும் நோய் குணமடையாததால், ராஜலட்சுமி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.