உளவுத்துறை அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவுக்கு பலி!
Aug 26, 2020, 09:06 IST1598412964000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இபாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மற்ற மாவட்டங்களிலிருந்தும், சென்னையிலிருந்து மற்ற மாவட்டத்திற்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த பேரிடர் காலத்திலும் முன்கள பணியாளர்கள், அரசு பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள உளவுத்துறை அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி முதல் சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கொரோனாவுக்கு அவர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.