தமிழக அரசின் நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்தது!

 

தமிழக அரசின் நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்தது!

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம அதிகரித்த நிலையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சீறிய முயற்சியால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்து கொரோனா பரவல் தாக்கத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதுடன் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்துவருகின்றனர். இதனிடையே இந்தியாவிலும் கொரோனா பரவல் வேகமாக பரவிவந்ததால் அதனை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களுக்கு பின் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்தது!

ஊரடங்கு தொடங்கிய ஆரம்பத்தில், அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், தமிழகத்தின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 49.8 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. ஆனால் அப்போது திட்டமிட்டு செயல்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கு நாட்களில், விவசாயிகள் பாதிக்காத வகையில், அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் வருவாய் துறையிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் என கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். இதனால் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து எந்த தங்கு தடையும் இன்றி நடைபெற்றது.

தமிழக அரசின் நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்தது!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ,769 மருத்துவர்கள் உட்பட 10,661 மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு நியமித்தது. இதனால் வேலை வாய்ப்பின்மை விகிதம் மே மாதத்தில் 33 சதவிகிதமாகவும், ஜூன் மாதத்தில் 13.1 சதவிகிதமாகவும் குறைந்தது. ஜூலை மாதம், வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் தமிழகத்தில் 8.1 % ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தொழில் தொடங்க வருமாறு பல்வேறு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதன் விளைவால் 30,664 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை தமிழகத்திற்கு முதல்வர் கிடைக்கப்பெற்றுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 67,812 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.