கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்

 

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்

கடந்த ஜூலை 22 ஆம் தேதி திமுக ராஜபாளையம் எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ தங்க பாண்டியன் குடும்பத்தினர் சமீபத்தில் மதுரைக்கு சென்று வந்த நிலையில் எம்எல்ஏ தங்க பாண்டியனின் மனைவி மற்றும் மகன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி 3 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்தே எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்
இந்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக ராஜபாளையம் எம்எல்ஏ தங்க பாண்டியன் குணமடைந்து நேற்றுமாலை வீடு திரும்பியுள்ளார்.