என்ஆர்காங். எம்எல்ஏவுக்கு கொரோனா : திறந்தவெளியில் புதுச்சேரி சட்ட பேரவை கூட்டம் !

 

என்ஆர்காங். எம்எல்ஏவுக்கு கொரோனா : திறந்தவெளியில் புதுச்சேரி சட்ட பேரவை கூட்டம் !

புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ஆர்காங். எம்எல்ஏவுக்கு கொரோனா : திறந்தவெளியில் புதுச்சேரி சட்ட பேரவை கூட்டம் !

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பேரவை நிகழ்வுகளில் ஜெயபால் கலந்து கொண்டுள்ளார். ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரி பேரவை கூட்டம் இன்று நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

என்ஆர்காங். எம்எல்ஏவுக்கு கொரோனா : திறந்தவெளியில் புதுச்சேரி சட்ட பேரவை கூட்டம் !

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சட்ட பேரவைக்குள் நுழையும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சட்ட மன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருவதால் சட்ட பேரவை கூட்டம் வழக்கமாக நடைபெறும் மைய மண்டபத்திலிருந்து தற்காலிகமாக வளாகத்தின் திறந்த வெளியில் மதியம் 12.30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.