சூலூர் அருகே தம்பி இறந்த வேதனையில் அண்ணன் தற்கொலை!

 

சூலூர் அருகே தம்பி இறந்த வேதனையில் அண்ணன் தற்கொலை!

கோவை

சூலூர் அருகே தம்பி இறந்த வேதனையில் அண்ணன் உடலில் மின்சாரத்தை பாய்ச்சிக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மணிகண்டன் (32) மற்றும் கார்த்திக். மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சூலூர் அருகே தம்பி இறந்த வேதனையில் அண்ணன் தற்கொலை!

தம்பி இறந்தது முதலே மணிகண்டன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் இருந்த மின்சார ஒயரை கையில் பிடித்துகொண்டு, சுவிட்சை ஆன் செய்துள்ளார்.

இதில் மின்சாரம் பாய்ந்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுபபினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.