மனைவி இறந்த வேதனையில் கட்டுமான தொழிலாளி தற்கொலை!

 

மனைவி இறந்த வேதனையில் கட்டுமான தொழிலாளி தற்கொலை!

நாகை

வேதாரண்யம் அருகே மனைவி இறந்த வேதனையில் கட்டுமான தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வடமலை மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (43). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் ராஜ்குமார் மனமுடைந்து காணப்பட்டு வந்து உள்ளார்.

மனைவி இறந்த வேதனையில் கட்டுமான தொழிலாளி தற்கொலை!

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த ராஜ்குமாரை, உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ராஜ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.