புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை வழக்கு: கைதி ராஜா தப்பியோடவில்லை மருத்துவமனையில் உறங்கியதாக தகவல்!

 

புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை வழக்கு: கைதி ராஜா தப்பியோடவில்லை மருத்துவமனையில் உறங்கியதாக தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராஜாவை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கை விலங்கை கழட்டிவிட்டு ராஜா தப்பிச்சென்றதாகவும் அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை வழக்கு: கைதி ராஜா தப்பியோடவில்லை மருத்துவமனையில் உறங்கியதாக தகவல்!

இந்நிலையில் குற்றவாளி ராஜா இன்று மாலை 5 மணிவரையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்தான் படுத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் குற்றவாளி ராஜாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குற்றவாளி ராஜா தப்பியோடியதாக காலை முதல் மருத்துவமனையை சுற்றி தேடிய போலீசார், மருத்துவமனை வளாகத்தில் தேடாத நிலையில் மாலை ஐந்து முப்பது மணி வரை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே கைதி ராஜா இருந்துள்ளதாக கூறப்படுவது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.