புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி கொலை வழக்கு: கைதி ராஜா தப்பியோட்டம்!

 

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி  கொலை வழக்கு: கைதி ராஜா தப்பியோட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார்,  அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி  கொலை வழக்கு: கைதி ராஜா தப்பியோட்டம்!
இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பூ வியாபரியான 27 வயதான ராஜேஷ் என்கிற ராஜா, சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி அலறி துடிக்க, அங்கிருந்த கருவேல மரக்கட்டையை எடுத்து சிறுமி தலையில் அடித்து கொன்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயது சிறுமி வன்கொடுமை, கொலை சம்பவத்தில் கைதான ராஜா என்பவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி  கொலை வழக்கு: கைதி ராஜா தப்பியோட்டம்!

இந்நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராஜா தப்பி ஓடியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கைதி ராஜாவை அழைத்து சென்ற போது தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தப்பியோடிய ராஜாவை 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.