இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

 

இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

ஐஎம்ஏ கிளை தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,914 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசி கண்டறிய பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்நிலையில் இந்திய மருத்துவ சங்க ராஜபாளையம் கிளை தலைவர் மருத்துவர் கோதண்டராமன் கொரோனாவால் பலியானார். கொரோனா பாதித்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.