பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை – வதந்திகளை நம்ப வேண்டாம் : மகன் அபிஜித் முகர்ஜி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூளை அறுவை சிகிச்சை டெல்லி ராணுவ மருத்துவமனை செய்யப்பட்டது. அதற்கான பரிசோதனையின் போது பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று செய்தி வெளியானது.
இந்நிலையில் தனது தந்தை உயிருடன் இருக்கிறார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகன் அபிஜித் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு தீவிர சிகிச்சை அழிக்கபட்டு வரும் நிலையில் உடல்நிலை குறித்த தகவலுக்கு அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.