பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

 

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

செய்யப்பட்டது. இதற்குள்ளாக அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதியானது.
அறுவைசிகிச்சை முடிந்தும் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. வென்டிலேட்டர் உதவியோடு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

 

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – ராணுவ மருத்துவமனை அறிவிப்பு
டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது ரத்த ஓட்டம் இயல்பாக உள்ளது. செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.