கொரோனாவிலிருந்து மீண்டு பிரணாப் முகர்ஜி நலம் பெற வாழ்த்துக்கள் -திமுக தலைவர் ஸ்டாலின்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற நிலையில் அவருக்கு அங்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முடிவு இன்று வெளியான நிலையில் அதில் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது பக்கத்தில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கோவிட் 19 -லிருந்து விரைவாக மீண்டு, நல்ல ஆரோக்கியத்திற்கு திரும்ப வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
I wish Thiru @CitiznMukherjee a speedy recovery from #Covid19 and a quick return to good health.
— M.K.Stalin (@mkstalin) August 10, 2020
அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கடந்த வாரம் பிரணாப் முகர்ஜியை சந்திக்க பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.