’30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா?’ பாஜக தலைவர் எல்.முருகன்

 

’30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா?’ பாஜக தலைவர்  எல்.முருகன்

எதிர் எதிர் அரசியல் கொள்கைகள் கொண்ட கட்சிகளின் அறிக்கை போர் என்றைக்கும் ஒரு முடிவுக்கு வராது. தமிழகத்தில் திமுக, அதிமுக என்றால், தேசிய அளவில் காங்கிரஸ் – பாஜக. டெல்லி மட்டத்தில் இருந்த அறிக்கை போர், தமிழகத்திலும் பரவி வருகிறது.

’30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா?’ பாஜக தலைவர்  எல்.முருகன்

காங்கிரஸ் கட்சியின் காமராஜர் அறக்கட்டளை தொடர்பாக பாஜகவினர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளிக்கையில் பாஜக தமிழக தலைமை இடம் அமைந்திருக்கும் இடமான கமலாயம் வாங்கப்பட்டது குறித்து சந்தேகங்களை எழுப்பியிருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி. அதற்கு பதில் அளித்திருக்கிறார் பாஜகவின் தமிழகத் தலைவர் எல்.முருகன்.

’பெருந்தலைவர் காமராஜர் அரும்பாடுபட்டு உருவாக்கிய தந்த தமிழ்நாடு காங்கிரசுனுடைய கமிட்டிக்கு அறக்கட்டளைக்கான சொத்துக்கள் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிப்பதை சுட்டிக்காட்ச்சிய காரணத்தினால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழக பாஜக தலைமை அலுவலகம் இயங்கும் இடத்தை ரூ 30 கோடி மதிப்புள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

’30 கோடி ரூபாய்க்கு கமலாயத்தை வாங்கிக்கொள்கிறீர்களா?’ பாஜக தலைவர்  எல்.முருகன்

20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய விலையையும் இப்போதிருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்தி பேசியிருப்பது அவர் எத்தகைய குழப்பத்திலிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறாது. ரூ.30 கோடி என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தார் என்று தெரியவில்லை. அவர் குறிப்பிட்டுள்ள படி ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக்கொள்ள தயாரா? மேலும் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா சுந்தர் முக்கிய பொறுப்பில் பா.ஜ.கவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இடத்தை வாங்கும்போது முக்தா சீனிவாசன் காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது’ என்று கூறியுள்ளார்.