2021 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் : பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன்

 

2021 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் :  பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள கடந்த சில  நாட்களுக்கு முன் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

2021 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் :  பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன்

இதனைத்தொடர்ந்து, கோவையில்  அடுத்தடுத்து 4 கோவில்களில் தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கோவில்கள் சேதம் அடைந்த நிலையில், அங்கு மிகவும் பரபரப்பு நிலவியது.

2021 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் :  பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக விழித்துக் கொள்ளவில்லை என்றால் 2021 தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறை அதிமுகவும் செய்கிறது. இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை”என்று கூறியுள்ளார்.