மணப்பாறையில் ரயில் மோதி முதியவர் பலி!

 

மணப்பாறையில் ரயில் மோதி முதியவர் பலி!

திருச்சி

மணப்பாறை அருகே ரயில் மோதிய விபத்தில் திண்டுக்கலை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் திருநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமசாமி. இவர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று மணப்பாறை கீரை தோட்டம் பகுதியில் தண்டவளத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

மணப்பாறையில் ரயில் மோதி முதியவர் பலி!

அப்போது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் ராமசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ராமசாமி உயிரிழந்தார்.

இதுகுறித்து ராமசாமி உறவினர் அளித்த புகாரின் பேரில் திருச்சி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.