இருசக்கர வாகனம், மரத்தின் மீது மோதி விபத்து – இருவர் பலி!

 

இருசக்கர வாகனம், மரத்தின் மீது  மோதி விபத்து – இருவர் பலி!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உடற்பயிற்சி மைய உரிமையாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் சேவியர். இவர் ராமேஸ்வரம் பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வந்தார். நேற்று பயிற்சி மையத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக ஜோசப் சேவியர், தனது உறவினர் சஞ்சய் (18) என்பவருடன் ராமநாதபுரத்துக்கு சென்றிருந்தார்.

இருசக்கர வாகனம், மரத்தின் மீது  மோதி விபத்து – இருவர் பலி!

பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் ராமேஸ்வரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். உச்சிப்புளி அருகே வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஜோசப் சேவியர் மற்றும் சஞ்சய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.