சிறுகனூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கணவர் கைது!

 

சிறுகனூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கணவர் கைது!

திருச்சி

திருச்சி அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த சரடமங்கலத்தை சேர்ந்தவர் பிரபு (38). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், புவனேஸ்வரியிடம் நகை மற்றும் சீர்வரிசை பெற்று வரக்கோரி, பிரபு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிறுகனூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கணவர் கைது!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுகனூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், புகாரின் பேரில் பிரபுவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே வரதட்சணை கொடுமையால் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? என லால்குடி ஆர்.டி.ஓ வைத்தியநாதன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று புவனேஸ்வரி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி லால்குடி ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு, அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.