நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவர் கைது!

 

நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவர் கைது!

மதுரை

மதுரையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை, போலீசார் கைதுசெய்தனர்.

மதுரை கோச்சடை முத்தையா கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பையா. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பையா, மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகித்து வந்துள்ளார். இது தொடர்பாக தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவர் கைது!

இந்த நிலையில், நேற்று இரவு மது அருவிந்தி விட்டு வீட்டிற்கு வந்த சுப்பையா, மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் பெற்றோர புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சுப்பையாவை கைதுசெய்தனர்.