காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை!

 

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை!

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் காதல் திருமணம் செய்த சில மாதங்களிலேயே, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (22). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மணிமேகலையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் உறவினரின் இறப்பின் போது மோகன்ராஜ் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை!

இதனை கண்டித்ததால் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த மணிமேகலை நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து மணிமேகலை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருமணமாகி சில மாதங்களிலேயே பெண் உயிரிழந்ததால், இதுகுறித்து, இலுப்பூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.