காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்- ஆர்.டி.ஓ விசாரணை!

 

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்- ஆர்.டி.ஓ விசாரணை!

கடலூர்

கடலூர் அருகே காதல் திருமணம் செய்த 10 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த மேல புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜதுரை. தனியார் வங்கி ஊழியர். இவர் வடலூர் அருகேயுள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா என்பவரை கடந்த 10 மாதங்களுக்கு காதல் திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்- ஆர்.டி.ஓ விசாரணை!

திருமணத்திற்கு பின்னர், ராஜதுரை வரதட்சணை கேட்டு, வைஜெயந்தி மாலாவுடன் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை அன்று வைஜெயந்தி மாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் வைஜெயந்தி மாலாவின் மரணத்தில் மர்மம் உள்ளதா புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 10 மாதங்களே ஆனதால் இது குறித்து கடலூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.