நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு!

 

நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா:  பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா:  பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா:  பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு!

இந்நிலையில் நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை நகரில் 86, பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 25, வள்ளியூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.