இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சில நாட்களாகக் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டு மொத்த பாதிப்பு 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,800 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2,02,283 ஆக அதிகரித்துள்ளது. இன்று 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,241 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,998 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 1,021 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,02,985 பேர் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா உயிரிழப்பு 2,176 ஆக உள்ளது. சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.