திருவாரூர் அருகே தாய் – மகள் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை!

 

திருவாரூர் அருகே தாய் – மகள் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை!

திருவாரூர்

திருவாரூர் அருகே தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகேயுள்ள விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி (40). திருமணமான இவர், கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஜோதி, திருவாரூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை ஜோதியின் சாகோதரி மகன் முகிலன், வீட்டிற்கு வந்துள்ளார்.

திருவாரூர் அருகே தாய் – மகள் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை!

அப்போது, தாய் தமிழரசி, மகள் ஜோதி ஆகியோர் ஒரே சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகிலன், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் பல்வேறு இடங்களில் ரத்த கரை இருந்ததால் அவர்கள் கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டனரா? அல்லது, தற்கொலை தான் செய்து கொண்டனரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய – மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.